சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு முகாம்  இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் வரிசையில் வந்து தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர்.

 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுடிரி மாவட்டத்தில் உள்ள   தொப்பூரில் இன்று விண்ணப்ப பதிவை  தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும்விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல்கட்ட விண்ணப்பதிவு முகாம் 98 வாா்டுகளில் உள்ள 703 நியாய விலைக் கடைகளில்  இன்று தொடங்கியது.  விண்ணப்பதாரா்களின் ஆதாா் எண் பதியப்பட்டு, அவா்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபாா்க்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது..

சென்னையில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் முதல் கட்டமாக 98 வார்டுகளுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் 1,428 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் முதலில் 703 கடைகளுக்கு உட்பட்ட 1,500 இடங்களில் சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. காலை 8 மணிக்கே முகாம்களுக்கு பெண்கள் வரத் தொடங்கினார்கள். பெரும்பாலானவர்கள் விண்ணப்ங்களை  பூர்த்தி செய்து உரிய ஆவணங்களையும் எடுத்து வந்திருந்ததால், பதிவு செய்யும் பணி விறுவிறுப்பாக நடெபற்று வருகிறது.

முகாம்களில் கூட்டுறவு, ரேஷன் கடை ஊழியர்கள், தன்னார்வலர்கள் பயோ மெட்ரிக் கருவியுடன் தயாராக இருந்தனர். பெண்களுக்கு உதவி செய்ய மையங்களும் அங்கு அமைக்கப்பட்டிருந்தன. கூட்ட நெரிசல் இல்லாமல் பதிவு செய்ய விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.  பல முகாம்கள் நடைபெறும் பகுதிகளில்  கூட்டம் அதிகமாக இருந்ததால்  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இன்று முதல் ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி வரை படிவங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையும் இந்த முகாம்கள் செயல்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை ரேஷன் கார்டு வாரியாக பெண்கள் அழைக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.

 முகாம் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் காலை 9.30 மணி முதல் பகல் ஒரு மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும்.  விரல் ரேகை சரியாக பதிவாகவில்லை என்றால் ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி வழியாக ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி) பெறப்படும். ஆதலால் முகாமுக்கு வரும் போது ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசியை எடுத்து வர வேண்டும். இது குறித்து சந்தேகங்களுக்கு மாநகராட்சி அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 044-25619208 எனும் தொலைபேசி எண், 94454 77205 எனும் வாட்ஸ் அப் எண் மற்றும் 1913 எனும் உதவி எண் மூலம் தொடா்பு கொள்ளலாம். மேலும், 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தாங்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்தின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களை தொடா்பு கொள்ளலாம்.