Skip to content
  • Thu. Jul 16th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

மோடி பாராட்டிய மதுரை சலூன்கடைக்காரரின் மகள் ஐ.நா.சபை நல்லெண்ண தூதராக தேர்வு…

Jun 5, 2020

ஜெனிவா:

கொரோனா ஊரடங்கின்போது உதவி புரிந்து, பிரதமர் மோடியால்  பாராட்டுப்பெற்ற  மதுரை சலூன்கடைக்காரர் மோகனின்  மகள் நேத்ரா ஐ.நா.சபையின்  நல்லெண்ண தூதராக  தேர்வாகியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கொரேனா வைரஸ் தொற்று இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை மிரட்டி வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் இந்தியா உள்பட உலக நாடுகள், பொது முடக்கத்தை அறிவித்து வருகின்றன. இதனால் உலக பொருளாதாரம் சீர் குலைந்துபோய் உள்ளது.

இந்தியாவிலும் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், தினக்ககூலிகள் முதல் தொழில் முதலைகள் வரை அனைத்தும் தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் கொரோனா  ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு,  மதுரை  மேலமடை பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரர்  மோகன், தனது மகளின் மேற்படிப்புக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி  மகிழ்ந்தார். சுமார் 615 குடும்பத்தினருக்கு அவர்கள் உதவியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான தகவல் பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவரும் கடந்த வாரம் வானொலி உரையான மான்கிபாத் நிகழ்ச்சியில் மோகனையும், அவரது குடும்பத்தினரையும் பாராட்டினார்.

கள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
பெற்றோருடன் நேத்ரா

இந்த நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.  இந்த தகவலை மோகன் தெரிவித்து உள்ளர்.

ஐ.நா.வின் (வளர்ச்சி மற்றும் அமைதிக்கான) அவை சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக அறிவிப்பட்டுள்ள நேத்ராவுக்கு  ரூபாய் 1 லட்சம் ஊக்கத்தொகையும் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மாநாட்டில் வறுமை தொடர்பாக பேசவும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்,  தனது படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி  ஐ.நா. கவுரவத்தை வழங்கி உள்ளது.

Post navigation

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சத்தை தாண்டியது
05/06/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக உயர்வு… 24 மணி நேரத்தில் 9851

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

இந்தியா உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக கடும் தடைகள்: அமெரிக்க செனட்டில் புதிய மசோதா – இந்தியாவுக்கும் பாதிப்பு வருமா?

July 15, 2026 Sundar
உலகம்

“திறந்திடு சீசேம்” என ஹோர்முஸைத் திறந்த டிரம்ப்… கப்பல்கள் வெளியேற 20% கப்பம் வசூல்…

July 14, 2026 Sundar
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer