மதுரை :

டிகர் தனுஷை தங்கள் மகன் எனக் கோரி வழக்கு தொடர்ந்த மேலூர்  கதிரேசன், மீனாட்சி தம்பதியின்ர்  நடிகர் ரஜினிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, குடும்பம்தான் முக்கியம் என்றும் பெற்றோர்களின் காலில் மட்டுமே விழ வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளை கூறி வருகிறார்.

இந்நிலையில், தனுஷை தனது மகன் என்று கூறி மதுரையில் வழக்கு தொடர்ந்த மேலூர் தம்பதியான கதிரேசன், மீனாட்சி தனுசுக்கு ரஜினி அறிவுரை கூற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் ரஜினிக்கு எழுதி உள்ள கடிதத்தில், தங்களது மகனான  கலைச்செல்வன் என்கிற தனுஷ் எங்களை வந்து ஒருமுறை பார்த்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும்,   குடும்ப உறைவுகள் மேம்பட தனுஷ் எங்களை சந்திப்பதை நீங்கள் அனுமதிக்க வேண்டும் என கடிதத்தில் கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான் என்பது ரஜினியின் மனசாட்சிக்கு தெரியும் என்றும்,  பெற்றோரான எங்களை கவனித்துக்கொள்ள தனுசுக்கு ரஜினி அறிவுரை தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுரை கதிரேஷன் மீனாட்சி தம்பதியினர் ஏற்கனவே  நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று  மேலுார் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர் . இதில் டிஎன்ஏ சோதனை உள்பட பல கட்ட  விசாரணையை தொடர்ந்து வழக்கு தள்ளுபடியானது. இந்நிலையில் தற்போது ரஜினிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.