அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கான கல்வித் தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்ய நிர்வாக முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசு பணிகளுக்கான க்ரூப் 3, க்ரூப் 4 போன்ற அடிப்படை தேர்வுகளுக்கு குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை நிர்ணையம் செய்யக்கோரி வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, அடிப்படை அரசு பணிகளுக்கு தேர்வாகும் கூடுதல் கல்வித் தகுதி உடையவர்கள், முறையாக பணியாற்றுவது இல்லை என்று குற்றம்சாட்டியதோடு, அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கான கல்வித் தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்து, அது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நிர்வாகத்துறை முதன்மை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.