துரை

ரிமம் இன்றி மாணவர்களை வாகனம் ஓட்ட பெற்றோர் அனுமதிக்கக் கூடாது எஅ மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தி உள்ளது.

முத்துமணி என்னும் மாணவர் விருதுநகரை சேர்ந்தவர் ஆவார்.  இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கில் சுமார் 17 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் காப்பீட்டு நிறுவனத்திற்குத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

காப்பீட்டு நிறுவனம் இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தது. விசாரணையின் போது, விபத்தில் உயிரிழந்த மாணவரிடம் உரிமம் இல்லை எனவும், விபத்திற்கு லாரி ஓட்டுநர் மட்டுமே காரணம் அல்ல என்றும் நீதிபதி தெரிவித்தார்.

காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை நிர்ணயித்து அதில் 50 சதவீதத்தை  வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

உரிமம் இன்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஒட்டுவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதி அறிவுறுத்தினார்.