ராணிப்பேட்டை

நாளை ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழகமெங்கும் ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படுகிறது.  இதற்காகப் பக்தர்கள் முருகன் ஆலயத்துக்கு அதிகளவில் சென்று வழிபடுவது வழக்கமாகும்.

குறிப்பாகத் திருத்தணி உள்ளிட்ட முருகன் கோவில்களில் பெருமளவில் மக்கள் கூடி வழிபாடு நடத்துவார்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு  நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ரத்தினகிரி, திருத்தணி முருகன் கோவில்களுக்கு அதிகளவில் செல்வார்கள் என்பதால், மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த விடுமுறைக்குப் பதிலாகப் பள்ளி, கல்லூரிகள் வரும் 12ம் தேதி சனிக்கிழமை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.