மதுரை:

மதுரை திருமங்கலம் அருகே மறவங்குளம் நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 ஐயப்ப பக்தர்கள் பலியானார்கள்.

சபரிமலைக்கு சென்று விட்டு இன்று மாலை காரில் தெலங்கானா திரும்பியபோது மதுரை திருமங்கலம் அருகே மறவங்குளம் நான்கு வழிச்சாலையில் விபத்துக்குள்ளானது.

இதில் 4 ஐயப்ப பக்தர்கள் பலியாயினர். காயமடைந்த ஐயப்ப பக்தர் ஒருவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.