சென்னை: 
ம்டிடி 23 என குறியீடாகப் பெயரிடப்பட்டுள்ள மாசிங்ககுடி மனிதனை உண்ணும் முயற்சியில் தமிழக வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் செப்டம்பா் 24 ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த 56 வயதான சந்திரன் என்பவா் புலி தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உத்தரவின் பேரில், நீலகிரியில் சுற்றித்திரியும் எம்டிடி 23 புலியைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினா் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், புலியைச் சுட்டுப் பிடிப்பது தொடர்பாக, வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவு பிறப்பிக்கும் முன்னா், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எம்டிடி 23 புலியை உயிருடன் பிடிக்க உத்தரவிட வேண்டுமெனவும் சென்னை உயா் நீதிமன்றத்தில் கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.
இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ்ஜின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், செப்டம்பா் 29ஆம் தேதி முதல் புலியைப் பிடிப்பது தொடர்பான நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவுக்குப் பின், கடந்த 10 நாட்களாகத் தலைமை வன உயிரினக் காப்பாளா் நீலகிரி பகுதியில் முகாமிட்டு, புலியைப் பிடிக்கும் பணிகளைக் கண்காணித்ததாகவும், கும்கி யானைகள், மோப்ப நாய்கள் உதவியுடன் அக்டோபா் 15ஆம் தேதி புலிக்கு மயக்க மருந்து செலுத்திப் பிடிக்கப்பட்டு, மறுநாள் மைசூரு விலங்கியல் பூங்காவில் உள்ள மீட்பு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது புலிக்கு அளிக்கப்படும் சிகிச்சைப் பலனளிப்பதாகவும், புலிக்கு கல்லீரலில் சிறு வீக்கம் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்டிடி 23 என குறியீடாக பெயரிடப்பட்டுள்ள மாசிங்ககுடி மனிதனை உண்ணும் முயற்சியில் தமிழக வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி டி  ஆதிகேசவலு ஆகியோரின் முதல் பெஞ்ச், “புலி உயிருடன் பிடிபட்டதாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
மைசூரு உயிரியல் பூங்காவில் புலி தற்போது குணமடைந்து வருவதாகவும், விலங்குகளின் உணவு உட்கொள்ளும் இயல்பு நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.