சென்னை: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தி கொலை வழக்கு  குற்றவாளிகள் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை  விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளு படி செய்து உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை கொலை வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டு 30 ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகஅரசு தீர்மானம் நிறைவேற்றியது. கடந்த  2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்மீது ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்காமல், குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்தை சாக்காக வைத்துக்கொண்டு, தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தில் ஆளுனர் தாமதிப்பதால், அவரது ஒப்புத லுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி   சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,   நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்ததும்,  இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவை பரிந்துரையை குடியரசு தலைவருக்கு அனுப்பியதும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தெரிவித்தார்.

அரசியல் சாசனத்துக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் உயர் நீதிமன்றம் அதை சட்டவிரோதம் என அறிவிக்கலாம் எனவும், இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் தெரிவிக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால் இந்த விவகாரத்தை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க கூடாது எனவும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம்போல், விடுதலை செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அதற்கு உச்ச நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதற்கு படதில் கூறிய  நளினி தரப்பு வழக்கறிஞர், நாங்கள் விடுதலைகோரவில்லை  என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யும்படி அரசுக்கு உத்தரவிடதான் கோருகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பான ஆவனங்களை குடியரசு தலைவர் இன்னும் ஆளுநருக்கு அனுப்பவில்லை என்பதை சுட்டிக்காட்டியதுடன், அவ்வாறு  அனுப்பினாலும் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்பதால் நளினியை விடுதலை செய்யும்படி மாநில அரசுக்கு  உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,  நளினிக்கு  விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாகவும், ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ல் அமைச்ச ரவை ஆளுனருக்கு பரிந்துரைத்ததாகவும் குறிப்பிட்டவர்,  ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை  உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளதுடன்,   ஆளுநரின் கையெழுத்து அவசியம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததால், நாளை (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டது. அதைத்தொடர்ந்து  இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில், பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செயததுபோல  சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரத்தை பயன் படுத்தி மனுதாரர்களை விடுவிக்க உத்தரவிட முடியாது என மறுத்துள்ளதுடன், நளினி, ரவிசந்திரன் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும், இதுதொடர்பாக மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு  அறிவுறுத்ததப் பட்டுள்ளது.