புதுடெல்லி:

இந்திய விமானப்படையின் விமானத்தை டாக்ஸியைப் போல் பிரதமர் மோடி பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.


தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறினார்.

அவரது கருத்துக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு வலுத்துவருகிறது.
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, இந்திய போர் கப்பலில் குடும்பத்தோடு உல்லாசப் பயணம் சென்றதாக மோடி குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங், தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்திய விமானப் படை விமானத்தை எடுத்துக் கொண்டு பிரதமர் மோடி சுற்றுகிறார். விமானப் படை விமானத்தை அவர் டாக்ஸியைப் போல் பயன்படுத்துகிறார்.

வாடகையாக மிக குறைந்த தொகையை தருகிறார். இப்படி இருக்கும் நீங்கள், மற்றவர்களைப் பார்த்து விரல்களை காட்டுகிறீர்களே, வெட்கமாக இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.