இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் தோனி.

இதுவரை விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த தோனி முதல் முறையாக ஒரு நாவலுக்கு மாடலாக நடித்திருக்கிறார்.

ரமேஷ் தமிழ்மணி எழுதியுள்ள அதர்வா என்ற நாவலுக்கு கிராபிக்ஸ் காட்சிகளை கொண்டு கதையோட்டத்தை மிடாஸ் மற்றும் விர்ஸு ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தத்ரூபமாக தந்திருக்கிறார்கள்.

காலத்திற்கேற்ற மாறுதலுடன் வெளிவர இருக்கும் இந்த கிராபிக்ஸ் நாவல் அமேசான் இணையத்தளம் மூலம் விற்கப்பட இருக்கிறது.

இந்த நாவலில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மாடலாக தோன்றியிருக்கிறார் தோனி, இதை தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.