சென்னை; கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக பணியாற்றிய 58 காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை சிறப்பிக்கின்ற வகையில் 58 காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிடும் அடையாளமாக 14 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.