பிரபல பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்திருப்பதாக அவரது மகன் சரண் நேற்று மகிழ்ச்சி தெரிவித்தார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து  வெண்டி லேட்டா், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்பிபி உடல் நிலை சீராக உள்ளது,  சுய நினைவு திரரும்பியது எழுதி காட்டுகிறார், ஐபேடில் கிரிகெட் டென்னிஸ் பார்க்கிறார் என்றும் சரண் தெரிவித்தார். இவ்வளவு முனேறறம் அடைந்தும் நுரையீரல் பகுதி முழுமையாக குணம் அடையாதது வருத்தத்தை தந்துள்ளது. நுரையீரல்  குணமடைந்து வந்தாலும் அதற்கு இன்னும் அதிக நாட்கள் தேவை என்று மருத்துவ வட்டாரம் தெரிவிக்கிறதாம்.

மீண்டும் புத்துணர்சியுடன் செயல்பட  எஸ்பிபிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்காக அரசிடம் முறைப்படி பதிவு செய்யப்படி ருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.