ங்க கடலில், அடுத்த வாரம் புதிதாக இரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைகள்  உருவாக இருப்பதாகவும் இதன் காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“வரும் 21ம் தேதி வட அந்தமான் அருகேயும், தென்கிழக்கு வங்க கடலில் வரும் 27ம் தேதியும் அடுத்தடுத்து இரு  புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகக்கூடும்.

அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்தத்தை பொறுத்தவரை பெரும்பாலும் அது தமிழகம் நோக்கி வர வாய்ப்பில்லை. ஆனாலும் காற்றின் சுழற்சியை பொறுத்து தென் மாவட்டங்களில் மழை பெய்ய  வாய்ப்புள்ளது.

அதேநேரம் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய அதிக  வாய்ப்புள்ளது” என்று  இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.