திருவண்ணாமலை

விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் இங்கு பக்தர்கள் மிக அதிக அளவில் வருவது வழக்கம்.

இந்நாட்களில் இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.

இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே  கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.