சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் பொதுமக்களுடன் வரிசையில் வந்து, தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிம் பேசும்போது,   நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தான் வெற்றி என கூறினார்.

மக்களவை தேர்தலையொட்டி, முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று   தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.  தமிழ்நாட்டில் இன்று  காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதுபோல அரசியல் கட்சியினர், திரையுலகினர் என பல தரப்பினரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில்,  தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன்   தான் குடியிருக்கும் தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது தனது வாக்கினை செலுத்தினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு,  தங்களது வாக்கினை செலுத்தும் வகையில், மு.க.ஸ்டாலின் தனது மவியாருடன்  வீட்டில் இருந்து நடந்தே வாக்குச்சாவடிக்கு வந்தார். அங்கே பொதுமக்களுடன்  வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை முதலமைச்சர் ஸ்டாலின் செலுத்தினார்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசும்போது, நான் என்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். எனவே அனைவரும் அவர்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி உறுதி என தெரிவித்த அவர், நீங்கள் நினைப்பதை போல இந்தியா கூட்டணிக்கு வெற்றி தான் என நம்பிக்கையுன் கூறினார்.

மக்களவை தேர்தல் 2024: எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அமைச்சர்கள், வேட்பாளர்கள், திரையுலகினர் வாக்குப்பதிவு…