டில்லி

ஒரு நாள் முன்னதாகவே மக்களவை அலுவல்கள் முடிவுற்று தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கபடுள்ளது 

 

கடந்த 4 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. நாளை அதாவது 22 ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

மக்களவையில் வண்ண புகைக்குண்டுகள் வீச்சு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் என பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

ஒருநாள் முன்னதாகவே மக்களவையின் அலுவல்கள் முடிவுற்றதால்  தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.