சென்னை :

மிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை  6,65,717வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அபராத வசூல் ரூ.20 கோடிய நெருங்கி உள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. தொடர்ந்து 7 கட்டமாக ஊரடங்கு ஆகஸ்டு 31ந்தேதி வரை லாக்டவுடன் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  ஊரடங்கை மீறி, தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, தமிழகத்தில் இதுவரை அனுமதியின்றி வெளியே சுற்றியதாக,  6,65,717  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 9.34 லட்சம் பேர் கைதாகி ஜாமீனில்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 8.49 லட்சம் வழக்குகள் பதிவாகின

விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.19.58 கோடி  அபராதமும் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல்துறை தெரிவித்து உள்ளது.