சென்னை :
மிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை  6,45,427 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், ரூ.18.39 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியா முழுவதும், கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 6 கட்டமாக ஊரடங்கு ஜூலை 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் இதுவரை தேவையான அனுமதியின்றி வெளியே சுற்றியதாக,  6,45,427 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை  8,81,797 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஊரடங்கு விதிகளை மீறியதாக 8 லட்சத்து 3 ஆயிரத்து 391 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், உத்தரவை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 18.49 கோடி ரூபாய் அபராதமும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.