காஞ்சிபுரம்

ரடங்கு விதிகளை மீறியதாகக் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13996 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

இதையொட்டி சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு கடந்த மாதம் 19 ஆம் தேதியில் இருந்து 30 ஆம் தேதி வரை அமலில் இருந்தது.

தற்போது ஜூலை5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 13.,996 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

ஊரடங்கை மதிக்காமல் சுற்றித் திரிந்த 9930 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 13,113 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.