சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்கு வழக்குகளை தாக்கல் செய்யும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில் வெற்றிபெற்ற 91 ஆயிரத்து 907 உள்ளாட்சி பிரதிநிதிகள் நேற்று பதவியேற்றனர்.

இத்ந நிலையில்,  தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தேர்தல் செலவு கணக்கை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தெரி விக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கு நகலை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டை, தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, வருங்காலங்களில் உள்ளாட்சி தேர்தல்களில் 3 ஆண்டுகளுக்குத் போட்டியிட தடை விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.