பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர்களை லோக் ஜனசக்தி கட்சி அறிவித்துள்ளது.

அம்மாநிலத்தில் வரும் 28ம் தேதி முதல் நவம்பர் 7 வரை  3  கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. முதல் கட்டமாக வரும் 28ம் தேதி 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது.
கடந்த 8ம் தேதி ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் முதல்கட்ட 42 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, 2வது கட்டமாக நவம்பர் 3ம் தேதி 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
அந்த தொகுதிகளில் களம் இறங்கும் 26 வேட்பாளர்களை லோக் ஜனசக்தி கட்சி இன்று அறிவித்துள்ளது.