வாணியம்பாடி:
திமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு சசிகலா பதிலளித்தார்.

வாணியம்பாடி அருகே சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவுக்கு சோதனை வந்த போது பீனிக்ஸ் பறவையாக எழுந்து வந்தோம் என்றும், அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவோம் என்றார்.

தமிழ் பண்புக்கு நான் அடிமை, கொள்கைக்கு நான் அடிமை என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வளர்க என்று முழக்கமிட்டார்.

எம்ஜிஆர் பாடலை சுட்டிக்காட்டி காரில் அமர்ந்தபடியே பேசியா சசிகலா, நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றும், ஜெயலலிதா நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பதை தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் தெரிவித்தார்.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்தார்.