திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்களை ஏற்றி சென்ற மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த லாரியை வழிமறித்த மர்மநபர்கள் அதற்கு தீவைத்தனர். இதில் லாரியும், அதிலிருந்த மதுபானங்களும் முற்றிலும் எரிந்து நாசமானது.

இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.