பெங்களூரு: ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியாவின் லியாண்டர் பயஸ் – ஆஸ்திரேலியாவின் எப்டென் இணை.

பெங்களூருவில் நடந்துவருகிறது ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர். இதில் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டி நடந்தது.

அதில், இந்திய – ஆஸ்திரேலிய இணை, இஸ்ரேலின் ஜோனதன் எர்லிச் – பெலாரஸின் ஆன்ட்ரி வாஸிலெவ்ஸ்கி இணையை எதிர்த்து விளையாடியது லியாண்டர் பயஸ் இணை.

மொத்தம் 1 மணிநேரம் 20 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில், 6-4, 3-6 மற்றும் 10-7 என்ற கணக்கில் இந்திய – ஆஸ்திரேலிய இணை வெற்றிபெற்று, இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு அரையிறுதியில், இந்தியாவின் புரவ் ராஜா – ராம்குமார் ராமநாதன் இணை, இந்திய – ஆஸ்திரேலிய இணையை எதிர்த்து விளையாடி, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.