பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டினா ரோனால்டோ தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

கால்பந்து களத்தில் கலக்கி கொண்டிருக்கும் கிறிஸ்டினா ரொனால்டோவுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஏராளமான பாலோயர்களை பெற்றுள்ள ரோனால்டா,  சமூக வலைதளமான  ஃபேஸ்புக்க், டிவிட்டரிலும் அவ்வப்போது பதிகளை போட்டு, அவரது ரசிகர்களிடையே மேலும் வரவேற்பை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், தனது மனைவியுடன் இணைந்து விடுதி ஒன்றில் மதிய உணவு சாப்பிடும் புகைப்படத்தை கிறிஸ்டினா ரோனால்டோ தனது டிவிட்டர் இணையதளத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. சுமால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரி டிவிட்டுகளையும் பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் இரண்டிலுமே தீவிரமாக இருக்கும் ரொனோல்டோவை,  சமூக ஊடக் சூப்பர் ஸ்டார் என்று அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ இதழ் வர்ணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.