திருச்சி:

ரமக்குடியில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்தை இயக்கி வைந்த பஸ் டிரைவரை சிவகங்கையில் வழக்கறிஞர்கள் சிலர் சேர்ந்து தாக்கியதால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சித்தார்.

இதன் காரணமாக வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது.

 

சிவகங்கையில் சாலைகளை சீரமைக்கக்கோரி,  வழக்கறிஞர்கள் சங்கத்தினர்  சிவகங்கை பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த திருச்சியிலிருந்து பரமக்குடி செல்லும் அரசு பேருந்து வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பேருந்தை மடக்கிய வழக்கறிஞர்கள்,  ஓட்டுநர் செல்வராஜ் இருக்கையில் இருந்து இழுத்து தாக்குதல் நடத்தினர்.   இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்துக்கொண்டிருந்த போலீசாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய டிரைவர் செல்வராஜ், பொதுமக்கள் முன்னிலையில், வழக்கறிஞர்கள் தன்னை தாக்கியது குறித்து மனம் வருந்தினர். அதைத்தொடர்ந்து,  அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதையறிந்த அவரது குடும்பத்தினர் அவரை உடடினயாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டிரைவரை தாக்கிய வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

டிரைவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த விவகாரம் மற்ற டிரைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.