சென்னை: தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு, வரும் 16ஆம் தேதி விசாரிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு காரணமாக பலர் தற்கொலையை நாடியதால், அந்த சட்டத்துக்கு மீண்டும் திமுக அரசு தடை விதிக்கும் மசோதா நிறை வேற்றியது. இதற்கு ஆளுநரும் அனுமதி வழங்கியதால், இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக,  கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. தற்போது சட்டமாக்கப்பட்ட உள்ளது.

இந்த நிலையில்,  தமிழக அரசு பிறப்பித்த ஆன்லைன் அவசர சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு இந்த வழக்கை தொடுத்துள்ளது. அந்நிறுவனத்தின் மனுவில்,  ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டை விளையாட வருபவர்கள் எச்சரிக்கை கொடுக்கபட்ட பின்னர் தான் விளையாட அனுமதிக்கபடுவார்கள். ஆதலால் அதனை சூதாட்டம் என கருதகூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே போன்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கோடு சேர்த்து இந்த வழக்கு விசாரணை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.