சென்னை:
மிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடக்கும் இந்த கூட்டத்தில், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, மாநகரக் காவல் ஆணையர்கள், கலந்து கொள்கின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவ்டிக்கைக குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை, போக்சோ வழக்குகள், அந்த வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இணைய வழி குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைககள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அலோசனைகளை வழங்க உள்ளார்.தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.