சென்னை: பொது பயன்பாட்டுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடலுக்கடியில் அருங்காட்சியகம் அமைக்கும் வகையில், அதற்கு தேவையான 5.29 ஹெக்டேர் நிலத்தை மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் தமிழக அரசு 1974ம் ஆண்டு கையகப்படுத் தியது. ஆனால், கடலுக்கடியில் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தாததால், கையகப்படுத்திய நிலத்தை திருப்பி தர வேண்டும் என நிலத்தை கொடுத்தவர்கள் உயர்நீதி மன்றத் தில் மனு கொடுத்திருந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  47 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசால் கையகப் படுத்தப்பட்டநிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவும், அதனால், நிலம் அரசுக்கு சொந்தமானது. இதில் அவர்கள்  உரிமை கோர முடியாது என கூறினார்.

அரசுத்தரப்பிலான  வாதத்தை ற்றுக்கொண்ட நீதிபதி, 47 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசாங்கத்துக்கே சொந்தம், அதில் தற்போது முன்னாள் உரிமை யாளர்கள் உரிமை கோர முடியாது என்று உத்தரவிட்டு மனுதாரர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.