ம்மு

டாக் பகுதிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் செய்யச் சென்ற ராகுல் காந்திக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அவர் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட நடைப்பயணத்தைத் தொடருவார் என்றும், அந்த பயணத்தை குஜராத்தின் போர்பந்தரிலிருந்து தொடங்கி அருணாசலப் பிரதேசத்தின் லோகித் மாவட்டத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயணத்தின் ஒரு பகுதியாக, ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்குச் சென்றார். அதைத் தொடர்ந்து அவர் பிப்ரவரியிலும் அவர் மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்குத் தனிப்பட்ட பயணம் மேற்கொண்ட போது லடாக் செல்ல முடியவில்லை.

இன்று, 2 நாள் பயணமாக லடாக் பகுதிக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றுள்ளார். அங்கு அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தவிர ராகுல் காந்தி செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து பெல்ஜியம், நார்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பா சுற்றுப்பயணத்தையும் அவர் தொடங்க உள்ளார்.