நாமக்கல்
ரு சில தமிழக தலைவர்கள் இந்தியா கூட்டணியில் இருந்து விலகக் காத்திருப்பதாக அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்
நேற்று  பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே பேசினார்.  நாமக்கல் நகர பா.ஜனதா சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் தொலைக்காட்சியில் இந்த பேச்சு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.  நிகழ்ச்சியை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை, கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டனர்.
பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
எல்.முருகன் செய்தியாளர்களிடம் ,
“தனிப்பட்ட நபர்களால் மேற்கொள்ளப்படும் சமுதாய பணிகளைப் பாராட்டி மத்திய அரசின் மூலம் அவர்களுக்குப் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. அவ்வாறு விருது பெற்றவர்களை மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டி உள்ளார். குறிப்பாகத் தமிழ்நாட்டில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பத்ரப்பன் என்பவர் அழிந்து வரும் நாட்டுப்புறப் பாடல்களைப் பொதுமக்களுக்கு எடுத்துச் சென்றதைப் பாராட்டியும், பல்வேறு சமூக நலப்பணிகளைச் செய்த மறைந்த நடிகர் விஜயகாந்த்தைப் பாராட்டியும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
‘இந்தியா’ கூட்டணி மக்களைக் குழப்பும் கூட்டணி என்று ஏற்கனவே கூறி வந்தார்கள். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே கூட்டணி உடைந்துள்ளது. தற்போது மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனியாக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரசும் ஒரே கூட்டணியில் போட்டியிட முடியாத சூழல் உள்ளது. மேலும் தமிழகத்திலும் இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சி தலைவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்குக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
எனது தெரிவித்துள்ளார்