தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பூ. 90 கால கட்டங்களில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் இவர்.

ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு இவருக்கு பக்தர்களாக இருந்த காலம் அது .

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல இயக்குனர் சுந்தர் சி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்கை, அரசியல் என பிஸியாகிவிட்டார். கிட்டத்தட்ட கடந்த 9 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் மூலம் மீண்டும் நடித்துவருகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் சமூகவலைத்தளத்தில் பொழுதை போக்கும் குஷ்பூ தன் ரசிகர்களுக்காக தன்னிடம் இருக்கும் ஒரே இளவயது படம் இதுதான் என்று அவரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் .

ரசிகர்கள் அனைவரும் நீங்களா இது என்றும் , அப்போவே நீங்க அவ்ளோ அழகா என்று கேட்டும் கமெண்ட் செய்து வருகின்றனர் .