மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க இடம்பெறுவது குறித்து தங்களின் தலைமை தான் முடிவெடுக்கும் என முன்னாள் எம்.பி கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க இடம் பெறுவது குறித்து தலைமை தான் முடிவு செய்து அறிவிக்கும். தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி தரும் என்று நம்பிக்கை உள்ளது. தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியினர் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர்” என்று தெரிவித்தார்.