சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. செப்டம்பரில் வெளியாகும் என அறிவிப்பு.

1990 – 1994 காலகட்டங்களில் தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கொண்டு இக்கதையை இயக்கி வருகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

நவம்பர் 12-ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு இன்றுடன் (மே 10) முடிவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படம் சசிகுமாரின் ‘நாடோடிகள் 2’ க்கு பின் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.