கோவை ராமகிருஷ்ணன்

நெல்லை:

விஸ்வ இந்து பரிசத் நடத்தும் ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது  என்று போராட்டம் நடத்த முயன்ற கொளத்தூர்மணி, கோவை ராமகிருஷ்ணன், வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஸ்வ இந்து பரிசத், ராமராஜ்யம் அமைப்போம் என்ற முழக்கத்துடன் ரதயாத்திரை நடத்தி வருகிறது. ஐந்து மாநிலங்களில் ரதயாத்திரை முடிந்து இன்று கேரளாவில் இருந்து தமிழகத்தின் நெல்லை மாவட்டத்துக்குள்  நுழைகிறது.

கொளத்தூர் மணி

இந்த ரதயாத்திரை மக்களை பிளவுபடுத்தும் நோக்கம் உடையது என்று தெரிவித்து பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வேல்முருகன்

இதற்கிடையே, ரதயாத்திரையை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்த திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஆகியோர் கைது செய்யப்பட்டனர்.