கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் திரையரங்கில் வெளியான படங்களில் முதலுக்கு மோசம் செய்யாத முதல் படம் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன்.

ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருந்த இந்தப் படம் பரவலான வரவேற்பையும், வசூலையும் பெற்றது.

இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியுள்ளது.

திரையரங்கில் வெளியாகும் படத்தை நான்கு வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களும்,விநியோகஸ்தர்களும் நிபந்தனை விதித்துள்ளனர். அதனால், அடுத்த மாதம் கோடியில் ஒருவன் ஓடிடியில் வெளியாகலாம்.