கொச்சி:
கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த 53  நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  கொச்சி மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டதாகக் கொச்சி மெட்ரோ ரயில் சேவை லிமிடெட்  தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கொச்சி மெட்ரோ ரயில் சேவை லிமிடெட்  அதிகாரிகள் தெரிவிக்கையில்,  இன்று முதல் காலை 8  முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலைய வளாகம் தொடர்ச்சியாக சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளான ரயில் நிலையத்திற்குள் வரும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனிங், வெப்பநிலை பரிசோதனை  செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி, அனைத்து ரயில் நிலையங்களிலும் கான்டேக்ட்லெஸ் டிக்கெட் சிஸ்டம்  அமைக்கப்பட்டுள்ளது.
ரயில்களுக்கான காத்திருப்பு நேரம் 20 செகன்ட் முதல் 25 செகன்ட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயிலின்  உள்ளே ஏறும் போதும், இறங்கும் போதும், ஒருவரை ஒருவரைத் தொடாமல் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.