புதுடெல்லி:
ரும் 4-ம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி கடந்த மாதம் பா.ஜ., மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உடன் இரண்டு முறை ஆலோசனை நடத்தினார். இதையடுத்து எந்த நேரத்திலும் மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சில அமைச்சர்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாத அமைச்சர்கள் பதவி இழக்க நேரிடலாம் என்றும் அமைச்சரவை விரிவாக்கத்தில் பல புதிய முகங்களுக்கும், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.