கோவை

திமுக துணைச் செயலர் கனிமொழி கோவையில் திமுக வெற்றி பெறுவது உறுதி எனக் கூறியுள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்டார்.பிறகு கனிமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

பேட்டியில் கனிமொழி.-

”நடை பெற உள்ள தேர்தலில் கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது. திமுக அரசு கடந்த மூன்றாண்டுகளில் மக்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றிருக்கிறது.. மீண்டும் பாஜக எந்த பொறுப்புக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனவேஎ கோவையில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. ’

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக கூறுகிறார்,  ஆனால் போதைப்பொருள் தடுப்பு துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே அதற்கு மத்திய உள்துறை அமைச்சரகம் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். உதவ மாநில அரசு அதற்கு தயாராக இருக்கிறது”

என்று கூறினார்.