சென்னை: தமிழக ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளராக  ஆனந்த் பாட்டீல்  இருந்து வந்தார். இவர் சமீபத்தில், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, ஆளுநரின் புதிய செயலாளராக கிர்லோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குனராக வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இருந்து வந்த ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்க ஆளுநரின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு இவர் தனி செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, தமிழக  ஆளுநர் பொறுப்பிற்கு வந்த ஆர்.என்.ரவிக்கும் ஆனந்தரவ் விஷ்ணு பாட்டீலே செயலாளராக  இருந்து வந்தார்.  இந்த நிலையில், ஆனந்த்ராவ்,  மத்திய பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை இணைச்செயலாளராக மாற்றப்பட்டார்.  இதையடுத்து ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யபட்டுள்ளார்.