10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ம் ஆண்டு கொரோனா காரணமாக நடைபெறவில்லை.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அதனுடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன தவிர பாராளுமன்றத்திலும் இதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

2011 – 12 ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியபோதும் அதுகுறித்த தரவுகள் 2014 ம் ஆண்டு பொறுப்பேற்ற பாஜக அரசால் வெளியிடப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள கார்கே.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழக்கமாக நடைபெற வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ம் ஆண்டு நடைபெறவில்லை என்றும் இதனை உடனடியாக நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதுடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.