கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பகல் நேர வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி உயர்ந்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக மாணவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் அதிக வெப்பம் காரணமாக இன்று (ஏப்ரல் 17) முதல் ஒரு வார காலத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.