ஸ்ரீஹரிகோட்டா: இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட புத்தாண்டு முதல் ராக்கெட்டான PSLV C-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, 2026-ஆம் ஆண்டின் முதல் விண்வெளித் திட்டமாக பி.எஸ்.எல்.வி-சி62 (PSLV-C62) ராக்கெட் இன்று காலை 10:18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. புவியைக் கண்காணிக்கும் இ.ஓ.எஸ்-என்1 (EOS-N1) உட்பட மொத்தம் 18 செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்றது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்த நிலையில்,   இந்த ராக்கெட் குறிப்பிட்ட இடத்திற்கு நிலைநிறுத்துவதில் தோல்வி அடைந்துள்ளது. இதை இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுபடுத்தி உள்ளார்

இ,துகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர், ‘ ராக்கெட் திட்டமிட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றதால், இலக்கை அடையவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது இதற்கான தரவுகள் (Data) தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ராக்கெட் ஏவப்பட்ட சற்று நேரத்தில் எதிர்பாராத விதமாகத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு கட்டுப்பாட்டை இழந்தது.  பி.எஸ்.எல்.வி ஏவுகலத்தின் நான்கு நிலைகளில், முதல் மூன்று நிலைகள் வரை பயணம் சீராக இருந்ததாகவும், குறிப்பாக , திட மற்றும் திரவ எரிபொருள்களைக் கொண்ட நிலைகளைக் கடந்து, மூன்றாம் நிலையின் இறுதிக்கட்டத்தில் நுழையும் போதுதான் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே ராக்கெட் தனது பாதையை மாற்றிக்கொண்டது.

இது 2026 ஆம் ஆண்டின் முதல் ஏவுதல் ஆகும், மேலும் மே 2025 இல் ஏற்பட்ட இதே போன்ற தோல்விக்குப் பிறகு ஒரு மீள்வருகைத் திட்டமாக இது கருதப்பட்டது. இன்று காலை இந்திய நேரப்படி காலை 10:18 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்ட சுமார் எட்டு நிமிடங்களுக்குப் பிறகு, ராக்கெட்டின் மூன்றாவது நிலையில் (PS3) ஒரு கோளாறு ஏற்பட்டது, இது அதன் பயணப் பாதையில் குறிப்பிடத்தக்க விலகலுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக,   டிஆர்டிஓ-வால் உருவாக்கப்பட்ட முதன்மைப் பேலோடான EOS-N1 (அன்வேஷா என்றும் அழைக்கப்படும்) புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், மேலும் 15 சிறிய செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து, இழக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

 இந்த கோளாறு, மே 2025 இல் ஏற்பட்ட பிஎஸ்எல்வி-சி61 தோல்வியின் மறுபதிப்பாகத் தெரிகிறது, அதிலும் திட எரிபொருள் கொண்ட மூன்றாவது நிலையில் உள்ள அறை அழுத்தத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது. மூல காரணத்தைக் கண்டறிய, இஸ்ரோ விமானத் தரவுகளை விரிவாக ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது என்று தலைவர் தெரிவித்தார்.

பிஎஸ்எல்வி-சி62 திட்டத்தில் ஒரு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அது திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையை அடைவதைத் தடுத்ததாகவும் உறுதிப்படுத்தினார். இந்தத் தோல்விக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உயர்மட்டக் குழு விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்எல்வி-சி62, இந்தியாவின் தொலை உணர்வு மற்றும் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக, செயற்கைக்கோள்களை 505 கி.மீ சூரிய ஒத்திசைவு துருவ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

EOS-N1 மிஷன்: வெற்றிகரமாக ஏவப்பட்டது PSLV-C62

[youtube-feed feed=1]