காசரகோடு

ஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை விசாரணை இன்றி கொல்ல வேண்டும் என்னும் கேரள நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

அக்டோபர் 7 ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி எல்லை பகுதியைச் சூறையாடியது. இஸ்ரேலும்  இதற்குப்பதிலடி கொடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது.

போரில் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் இஸ்ரேலியர்கள் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டு உள்ளனர்.  கைதிகளை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஈடுபட்டு வருகிறது.  .

ஐக்கிய முஸ்லிம் ஜமாத் அமைப்பு சார்பில்  கேரளாவில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக, காசர்கோடு பகுதியை சேர்ந்த பேரணி நடத்தப்பட்டது. பேரணியில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்  ராஜ்மோகன் உன்னிதன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் தனது உரையில்,

”ஜெனீவா உடன்படிக்கையின் கீழுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் மீறுபவர்களை என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் கேட்கலாம். 2 ஆம் உலக போருக்குப் பின்னர், போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை (நாஜிக்கள்) நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கான விசாரணை நடந்தது. அப்போது, போர் குற்றவாளிகளை விசாரணையின்றி சுட்டுக் கொல்லும் நடைமுறை இருந்தது. 

இஸ்ரேல் பிரதமருக்கும் இது பொருந்தும். உலகத்தின் முன் நெதன்யாகு இன்று போர்க் குற்றவாளியாக நிற்கிறார். பாலஸ்தீனர்கள் மீது அவருடைய படைகளை அனுப்பி அராஜகங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். அதனால், விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் நெதன்யாகுவை சுட்டு கொள்வதற்கான நேரம் இது” 

எனத் தெரிவித்தது கடும் சர்ச்சையை  ஏற்படுத்தி உள்ளது.