சிங்கப்பூர்

த்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சிங்கப்பூரில் உள்ள நேதாஜி நினைவிடத்தில்  மலரஞ்சலி செலுத்தி உள்ளார். 

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தோனேசியாவில் 10-வது ஆசியன் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜகர்த்தா நகருக்குச் சென்றார். நேற்று முன்தினம் அவர் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், இந்தோனேசியா மற்றும் வியட்நாமின் அமைச்சர்களுடன் இருதரப்பு கூட்டங்களையும் நடத்தினார்.

பிறகு சொந்த நாட்டுக்குத் திரும்பும் வழியில், சிங்கப்பூருக்கு  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொண்டார். அங்கு இந்தியத் தேசிய ராணுவத்திற்கான நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ராஜ்நாத் சிங் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில்,

“இந்தியத் தேசிய ராணுவத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். இந்தியத் தேசிய ராணுவத்தின் ‘அடையாளம் தெரியாத வீரர்களுக்கு’ என்னுடைய மனப்பூர்வ அஞ்சலியைச் செலுத்தினேன்” 

எனத் தெரிவித்து உள்ளார்.