Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

கேரள விமான விபத்து- கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

Aug 8, 2020

கோழிக்கோடு:   நேற்று இரவு கேரளாவில் நடைபெற்ற விமான விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, அந்த  விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விமானம் விபத்துக்கு காரணம் என்ன என்பது விரைவில் தெரிய வரும் வாய்ப்பு உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின்மூலம் இந்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி இந்தியர்களை அழைத்து வருகிறது. அதன்படி,   துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத் திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது.

இந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்தனர். ஆனால், கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக, விமானம் தரையிறங்கு வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், விமானத்தை விமான ஓடுதளத்தில் இறக்கியபோது, விமானம் து சறுக்கிக்கொண்டு அருகே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த கோர விபத்தில் விமானி, துணை விமானி உள்பட  18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில்  விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியும், விமானிகளுக்கு  இடையே நடந்த உரையாடலை பதிவு செய்த CVR கருவியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக,விபத்துக்கு காரணம் என்ன என்பது ஆய்வுக்கு பிறகு தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Post navigation

ஆங்கிலேயர் கால கலாசி நடைமுறைக்கு முற்றுப்புள்ளி! இந்தியன் ரயில்வே அறிவிப்பு
கேரள விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை: கொரோனா எதிரொலியாக உறவினர்கள் பார்க்க தடை

Related Post

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

இந்தியா

மே 9-ல் மேற்கு வங்கம், மே 12-ம் தேதி அசாம் மாநிலங்களில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழா:

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer