சென்னை:

திமுகவில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி மீண்டும் கட்சியில் சேர்க்கப் பட்டார். முதல்வர் இபிஎஸ், துணைமுதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார்.

கே.சி.பழனிச்சாமி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உடன்படவில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கேசி பழனிசாமி தெரிவித்திருந்தார்

. அதிமுக தலைமையை கலந்தா லோசிக்காமல் அவர் தன்னிச்சையாக பேசியதாக கூறி, அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த ஆண்டு (2018)  மார்ச் 16-ம் தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து சில காலம், அதிமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர், பின்னர் அமைதியாக இருந்து வந்தார். இந்த இன்று தலைமை செயலகம் வந்த கே.சி.பழனிச்சாமி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், மீண்டும்  அதிமுகவில் இணைந்தார்.