நடிகை வனிதா விஜயகுமார், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி படு பிஸியாகி விட்டார்.

பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

சில தினங்களுக்கு முன்பு வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது.

இதற்கு வனிதா மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் நடிகை வனிதா, தனது ட்விட்டர் பக்கத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ரசிகர்கள் பலரும் அவர்கள் திருமணம் செய்துகொண்டதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இந்த புகைப்படத்தை நடிகை கஸ்தூரிக்கு ட்விட்டரில் டேக் செய்த ஒருவர், ஏன் இது குறித்து இந்த முறை பேசாமல் மெளனம் காக்கிறீர்கள் வனிதாவுக்கு பயமா என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த கஸ்தூரி,ஷப்பா என்னா பொறுப்புணர்ச்சி நம்ம மக்களுக்கு. வனிதாவை பாத்து இன்னொரு கல்யாணம்னு நினைக்கறது சரி… பவர் ஸ்டார் ஐ பாத்ததும் புரியலையா இது எதோ சினிமா ன்னு ? போயி புள்ளகுட்டிங்களை படிக்க வையி மேன்! என பதிலளித்துள்ளார்.

இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற வனிதா, கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். அப்போது பீட்டர் பால் மனைவிக்கும் மகனுக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் , கஸ்தூரி மற்றும் லிப்ரா ரவீந்திரன் உறுதுணையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .