சென்னை: “ கருணாநிதி வந்து செல்லமுடியாத அளவுக்கு நெருக்கடியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர் சட்டமன்றத்துக்கு வரவில்லை” என்று தி.மு.க. பொருளாளர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

stalin_100
இன்று கூடிய சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாள்ரகளிடம் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், “ஆளுநர் உரை ஜெயலலிதாவின் அட்டவணையாகவே இருக்கிறது” என்றார்.
மேலும், “சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்க கோரிக்கை விடுத்தோம்.  ஆனால் அவர் வந்து செல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே கருணாநிதி வரவில்லை” என்றார்.